Tuesday, 9 July 2013

மல்லிகா ஷெராவத்துக்கு பிடிவாரண்ட்…

மும்பை: புத்தாண்டு நடன நிகழ்ச்சியில் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆன வழக்கில் மல்லிகா ஷெராவத்துக்கு வதேதரா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. 

மும்பையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றில் கடந்த 2006 ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி புத்தாண்டு நிகழ்ச்சியில் நடனமாட ஒப்பந்தம் செய்யப்பட்டார் மல்லிகா ஷெராவத். இதற்காக அவருக்கு முன்பணமும் கொடுக்கப்பட்டது. 


இந்த நிலையில் அவர் நடனமாடாமல் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த ஹோட்டல் உரிமையாளர் மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். 

கடந்த 7 ஆண்டுகளாக வதேதரா நீதிமன்றத்தில் நடைபெற்றும் வரும் இந்த வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்துள்ளார் மல்லிகா ஷெராவத். இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் அவ்வாறு ஆஜராகத் தவறினால் இந்திய தண்டனைச் சட்டம் 294ல் கீழ் கைது செய்யுமாறு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment